புதுக்கோட்டை, ஆக.10 -
வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் குன் றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை- மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற் றது.
தமிழக அரசு அறிவித்த கிராமப்புற ஏழை, எளிய மக்களை மேம்படுத்து வதற்காக வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களைப் பட்டியல் தயாரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் பகுதியில் இப் பட்டியல் தயாரிப்பதில் பல்வேறு குளறு படிகளும், மோசடிகளும் நடைபெற றுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்ற னர்.
வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யவும், தகு தியான நபர்களை பட்டியலில் சேர்க்க வும் வலியுறுத்தி குன்றாண்டார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவல கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் முற்றுகையிட்டு அதிகாரியிடம் மனு அளித்தனர்.
போராட்டத்திற்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், வி. பழனிச்சாமி, கே.பழனிவேல், எஸ். சாந்தா, பி.பெருமாள், எம்.சின்னத் துரை, எஸ்.செல்வராஜ், எம்.மகா லெட்சுமி, ஏ.ஆறுமுகம், எஸ்.சிவபெரு மாள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.