விருதுநகர், மே 3-
சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு போலீசா ரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.75 லட்சம் மதிப்பிலான 3378 பாட்டில்களில் இருந்த மதுபானங்கள் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டன.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் சோதனை நடைபெற்றது. அப்போது, சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி விற்பனை செய்யப் பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதன் விபரம் வருமாறு: திருவில்லிபுத்தூர் பகுதியில் ரூ.2. 60 லட்சம் மதிப்பிலான 1861 பாட்டில்களும், சாத்தூரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 731 பாட்டில்கள், எம்.புதுப்பட்டி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 358 பாட்டில்கள், திருத்தங்கல் ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 170 பாட்டில்கள், பரளச்சி பகுதி யில் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான 128 பாட்டில்களும், ஆலங்குளம் பகுதியில் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான 63 பாட்டில்கள், அருப்புக்கோட்டையில் ரூ.3 ஆயிரம் மதிப்பி லான 26 பாட்டில்கள், வெம்பக்கோட்டையில் ரூ.4 ஆயி ரம் மதிப்பிலான 27பாட்டில்கள் மற்றும் அம்மாபட்டி மற்றும் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் 14 மதுபாட்டில்கள் என மொத்தம் சுமார் ரூ.4.70 லட்சம் மதிப்பிலான 3378 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மதுபாட்டில்களும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், கலால் உதவி ஆணையர் அமிர்த லிங்கம் தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் மது பானங்களை தரையில் ஊற்றி அழித்தனர்.