புதுக்கோட்டை, ஏப்.21-
தமிழ்நாட்டையே உலுக்கிய கிருஷ்ணகிரி சாதி ஆணவப் படு கொலையைக் கண்டித்தும் தமிழ் நாடு அரசு உடனடியாக ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக, புதுக் கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.சலோமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், விவசா யத் தொழிலாளர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.சங்கர், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.நாக ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அமைப்பின் மாவட்டத் தலை வர் ஜி.பழனிவேல் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஜி.கலை செல்வி, மாவட்டச் செய லாளர் கே.தமிழ்மணி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் பி.கந்தசாமி, எம்.கலைமணி, பி. கோமதி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி புறநகர் மாவட்டம் தா. பேட்டை ஒன்றியம் துலையாநத்தத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வீர விஜயன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சுப்ரமணி யன், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் பாலகுமார், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் லிங்கராணி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் சேகர், சிபிஎம் உப்பிலிய புரம் ஒன்றியச் செயலாளர் முத்துக் குமார், தா.பேட்டை ஒன்றியச் செய லாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
\தஞ்சாவூர்
தஞ்சாவூர் ரயிலடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப் பின் மாவட்டத் தலைவர் வழக்குரை ஞர் கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செய லாளர் நாத்திகன், தமுஎகச மாநில துணை பொதுச் செயலாளர் களப் பிரன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் மற்றும் சிபிஎம், தீண் டாமை ஒழிப்பு முன்ணணி, மாணவர், வாலிபர், மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.