districts

img

நரிக்குறவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, நவ.2- அதிகார வர்க்கத்தின் ஆணவம், நரிக்குறவர்கள் மீது அத்துமீறல், மனிதாப மானமற்ற அநீதியை கண் டித்து புதுக்கோட்டை மாவட்  டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் டி. சலோமி தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநிலத் தலைவர் எஸ்.சாமுவேல்ராஜ், கந்  தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்  துரை, சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி.சுசிலா, மாவட்டத் தலைவர் பாண்டிச்செல்வி, மக்கள் நீதிக்கான வழக்க றிஞர்கள், பேரவை வழக்கறி ஞர்கள் கென்னடி, அலெக்ஸ், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர்கள். தென்றல் கருப்  பையா, நெருப்பு முருகேஷ். கே.தங்கராஜ், கர்ணா மற்  றும் பலர் கண்டன உரையாற்  றினர். கருப்பசாமி வேடம ணிந்து தீபாவளி நன்கொடை வசூலிக்கச் சென்ற நரிக் குறவ சமூக மக்களான அப்பா துரை, ரஞ்சித், பாண்டி ஆகி யோரை இழிவுபடுத்திய தோடு, மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத் துப் போட கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும், காவல் நிலையத்தை சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.  மேற்கண்ட செயல்கள் நடக்க வாய்மொழி உத்தரவு பிறப்பித்த அறந்தாங்கி குற்ற வியல் நீதிமன்ற நீதிபதி தீபா  மீது உரிய விசாரணை நடத்த  வேண்டும். பாரம்பரியமாக வழிபட்டு வரும் நரிக்குறவர் களின் வழிபாட்டு தலத்திற்கு  பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். நரிக்குறவர் கால னிக்கு கழிவறைகள் அமைக்க வேண்டும்.

1977 ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆர் காலத்தில் கட்  டப்பட்ட பழுதடைந்த காலனி  வீடுகளை புதிதாக கட்டித் தர வேண்டும். பட்டுக்கோட்டை பிரிவில் இருந்து நரிக்குறவர் காலனி, செந்தமிழ் நகர், கூத் தாடி வயல் சாலையை செப்ப னிட வேண்டும்.  நரிக்குறவர்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்று கிடைக்க ஒன்றிய அரசின் உத்தரவை விரைந்து நடைமுறைப் படுத்த வேண்டும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை நரிக்குறவர்களுக்கு  தொடர்ந்து வழங்க வேண் டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநி லத் தலைவர் சாமுவேல்ராஜ் உரையாற்றுகையில், “தீபா வளி செலவுக்கு காசு கேட்டு சென்ற நரிக்குறவர்களை அவமதித்த அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்ற நீதி பதி தீபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒடுக்கப்  பட்ட மக்களுக்காக களத் தில் நின்று தொடர்ந்து போரா டிக் கொண்டிருப்பது செங் கொடி இயக்கம்தான். தமிழ்  நாடு முழுவதும் உள்ள நரிக்  குறவ இன மக்களை பற்றி எந்த அரசியல் கட்சியாவது பேசியது உண்டா? அறந்தாங்கி கூத்தாடி வயல் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்க ளின் பிள்ளைகள் அனை வரும் பள்ளிக்கூடம் செல்ல  வேண்டும். அதற்கு செங்  கொடி இயக்கம் பாடுபடும். எதிர்காலத்தில் நரிக்குறவ இன மக்கள் மருத்துவர்க ளாக, அரசு அதிகாரிகளாக, நீதிபதிகளாக வர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நரிக்  குறவ இன மக்கள் எங்கெல் லாம் வசிக்கிறார்கள் என கணக்கெடுத்து, இந்த மக்க ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு நிதி ஒதுக்கி மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்” என் றார்.