districts

தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையை கண்டித்து மார்ச் 3 வாலிபர், மாணவர் சங்கம் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

நீடாமங்கலம், பிப்.18 - மாணவர்கள், பெற்றோர்களிடம் கட்டாய  கட்டண வசூலில் ஈடுபடும் நீடாமங்கலம் நீலன்  மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி நிர்வா கத்தை கண்டித்து கருப்புக் கொடியுடன் மார்ச்  3 அன்று போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பி. ஜோதிபாசு  செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது: இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ஏ.அருள்குமார் தலை மையில் நீடாமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கட்டாய கட்டணக் கொள்ளை பற்றி  பரவலாக புகார்கள் வந்தது பற்றி விவா திக்கப்பட்டது.  மாணவர்களை நிர்ப்பந்தித்து கொரோனா  காலத்திலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தெரிய  வந்தது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக கொடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் நிர்ப்பந்திப்பதால், மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கொரோனா தொற்று காலத்தில் குடும்பங்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகிறது.  

இந்த தனியார் பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு அருகில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் தெரிய வரு கிறது. நியாயமற்ற அந்த தனியார் பள்ளி யின் இச்செயல்களை கண்டித்தும் திருவா ரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை,  பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரி 3.3.2022 அன்று நீடாமங்கலம் பெரி யார் சிலை எதிரில் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.  மேலும் நீடாமங்கலம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாண வர்கள் கட்டணக் கொள்ளையின்றி, தங்கள்  மேல்நிலை கல்வியை தொடர நீடாமங்கலத் தில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லை. இவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டு மென்றால் வலங்கைமான், மன்னார்குடி, கொரடாச்சேரி ஆகிய ஊர்களுக்குத்தான் செல்ல வேண்டும். நீடாமங்கலம் வருவாய் வட்ட தலைநகராக உள்ளதால் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவது மிகவும் அவசியம். எனவே இதற்கான முயற்சி களை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலரும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இவ்வாறு கே.பி.ஜோதிபாசு கூறினார்.  வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.பி. ஜோதிபாசு, முன்னாள் மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் டி.பி. கிஷோர்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.