districts

100 நாள் வேலைக்கான ஊதியம் வழங்காததைக் கண்டித்து திருக்கண்ணமங்கையில் மறியல்

திருவாரூர், மே 9-

    100 நாள் வேலைக்கான ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், 100 நாள் வேலையை  முழுமையாக வழங்க  வேண்டும். வேலை நாளை 150 நாட்களாக உயர்த்த வேண்டுமென வலியுறுத்தியும் அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் நடை பெற்றது. திருவாரூர் மாவட்டம்,கொரடாச்சேரி ஒன்றியம் திருக்கண்ணமங்கையில்   நடைபெற்ற சாலை மறிய லில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர். மணியன், செயலாளர் கே.கோபிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி. ஜெயபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் கே.செந்தில், சி.லோகநாதன், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் பங்கேற்றனர்.