districts

img

நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கண்டனம்

புதுக்கோட்டை, ஆக.10 - இந்திய நாட்டு வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவ னங்கள் நாட்டை விட்டு வெளியேற வலி யுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்ன ணியின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களைக் சூறையாடி, விவசாயிகளின் உரிமை களைப் பறித்து, மோடி அரசின் துணை யோடு இந்திய நாட்டு வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி, வெள்ளையனே வெளி யேறு இயக்க நாளான ஆக.9 அன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மாத வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து விதொச மாநிலச்  செயலாளர் எஸ்.சங்கர் உரையாற்றி னார். கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஜி.எஸ்.தனபதி மற்றும் நிர்வாகி கள், விதொச மாவட்டச் செயலாளர் டி. சலோமி, பொருளாளர் கே.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.

திருச்சிராப்பள்ளி

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் காதி  கிராப்ட் அருகே நடைபெற்றது. போராட்டத் திற்கு ஐக்கிய விவசாய முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  அயிலை சிவசூரியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்டக் குழு உறுப்பினர் சங்கர், ஒன்றியச் செயலாளர் சிவகுமார், சிபிஎம்  ஒன்றியச் செயலாளர் தங்கராசு, விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் தங்கதுரை, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் நடராஜன் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்  குழு உறுப்பினர் சிதம்பரம் நிறைவுரை ஆற்றினார். கரூர்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் கரூர் மாவட்டம் மாயனூர்  கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எஸ்கேஎம் ஒருங்கி ணைப்பாளர் ஜி.ராஜசேகர், விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. கந்தசாமி, மாவட்டச் செயலாளர் கே‌ .சக்திவேல், வி.தொ.ச மாவட்டச் செயலா ளர் பி.ராஜூ, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்  ஜி.தர்மலிங்கம், வி.தொ.ச மாவட்டத் தலைவர் கண்ணதாசன், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஏ.நாக ராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர்.