districts

img

பணி நிரந்தரம் செய்யக்கோரி கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.24- திருச்சி மாவட்ட சுமை பணி தொழிலாளர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட குழுக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செய லாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன் சிறப்புரையாற்றி னார்.  கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கத்தில் 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இண் டேன் எரிவாயு ஊழியர்க ளுக்கு, எண்ணெய் நிறுவ னம் வழங்கக்கூடிய சிலிண் டர் ஒன்றுக்கு, கூலியாக ரூ.33.40 வழங்கக் கோரியும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியருக்கு இணையான சலுகைகள் வழங்கக் கோரியும், திருச்சி தொழிலாளர் துணை ஆணையர் சமரசம் உத்தர வின்படி பணி நிரந்தரம் செய்யக் கோரியும் வருகிற 29 ஆம் தேதி காலை 10 மணி யளவில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளருக்கு மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.