districts

img

தோழர்கள் என்.சங்கரய்யா, எம்.சண்முகம் படத்திறப்பு

திருவாரூர், மார்ச் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டம் குட வாசல் கட்சி அலுவலகத்தில் நடை பெற்ற நிதி அளிப்பு கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தோழர்  என்.சங்கரய்யா மற்றும் மூத்த தோ ழர் எம்.சண்முகம் ஆகியோர் படத் திறப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை  வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத் முன்னிலை வகித்தார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம்  தோழர் என்.சங்கரய்யா படத்தை  திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார்.  சிபிஎம் நன்னிலம் தாலுகா செயலாளராக பணியாற்றி, குட வாசல் கட்சி அலுவலகத்தை உரு வாக்கிய மூத்த தோழர் எம்.சண்முகம் படத்தை மூத்த தோ ழர் டி.அய்யாறு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கட்சியின் குடவாசல் முன்னாள் பேரூராட்சி  மன்றத் தலைவர் ஆர்.வரதரா ஜன், மகன் ஆர்.வி.லெனின் உட்பட 8 பேர் கட்சியில் இணைந்த னர். கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி செந் துண்டு அணிவித்தார். பெ.சண்முகத்திற்கு வாழ்த்து முன்னதாக குடவாசல் நகரம், ஒன்றியம் மற்றும் விவசா யிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர், வாலி பர், மாணவர், சிஐடியு உள்ளிட்ட வெகுஜன அரங்கத்தின் நிர்வாகி கள், தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெற்ற வாச்சாத்தி போராளி தோழர் பெ. சண்முகத்திற்கு, கதர் துண்டு அணிவித்து வாழ்த்து தெரி வித்தனர்.  கூட்டத்தில் கட்சியின் குடவா சல் நகரம், குடவாசல் ஒன்றியம் சார்பாக கட்சி வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்க நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.