districts

img

தோழர் வி.சண்முகம் படத்திறப்பு

திருவாரூர், அக்.21 - திருவாரூர் ஒன்றியம் தப்பளாம்புலியூர் கிளை இலங்கைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முன்னாள் உறுப்பினரும், மூத்த தோழருமான வி.சண்முகம் படத்திறப்பு சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி.பவுன்ராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அன்னாரது படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.சேகர், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.எஸ்.சுந்தரய்யா, கிளை செயலாளர் வீ.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.