districts

img

தோழர் சிங்கராயர் படத் திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு

திருச்சிராப்பள்ளி அண்ணாநகர் கட்சி  கிளைச் செயலாளராகவும், அண்ணா நகர் நேதாஜி படிப்பகம், கட்டுமானம் , முறைசாரா, சாலை போக்குவரத்து ஆகிய சங்கங்களை உருவாக்கி திறம்பட செயல்படுத்திய மறைந்த தோழர் சிங்கராயர் படத் திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு கிளைச் செயலாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், தோழர் சிங்கராயர்  படத்தை திறந்து வைத்தார். தாலுகா செயலாளர் மல்லிகா, முருகேசன், தியாகராசன்,  அருள்தாஸ், லெட்சுமி ரெங்கநாதன், பிரபாகரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.