பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் தோழர் சிங்காரவேலர் நினைவு தினம் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.