திருவாரூர், டிச.30- சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் சனிக் கிழமை திருவாரூரில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலக் குழு சார்பாக நடை பெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன் தலைமை வகித்து உரை யாற்றினார். மாவட்டச் செயலா ளர்கள் எஸ்.துரைராஜ் (மயிலாடு துறை), கோவை.சுப்பிரமணியன் (நாகை), என்.வி.கண்ணன் (தஞ்சை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்டச் செயலா ளர் எம்.சேகர் வரவேற்றார். மாநிலத் தலைவர் பெ.சண்முகம் படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத் தினார். அரூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லி பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெரு மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம் மற்றும் பலர் புகழஞ்சலி உரையாற்றினர். விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தோழர் சங்க ரய்யா வாழ்க்கை குறித்து உரையாற் றினார். திருவாரூர் மாவட்டத் தலை வர் எஸ்.தம்புசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அமைப்பின் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திரு வாரூர் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.