நாகப்பட்டினம், பிப்.2 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட கடலோர கிராமமான வெள்ளப்பள்ளம் கிரா மத்தில், ஓலைக் குடிசையில் பிறந்தவர் தோழர் எஸ்.முருகேசன். அவர் பிறந்த 1950-களில் கீழதஞ்சை முழுவதும் பண்ணை அடிமைத்தனம், சாதி- தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் தீவிர மாக நடந்த காலம் அது. கம்யூனிஸ்ட் கட்சி இந்த கொடுமைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி போராடிக் கொண்டி ருந்தது. வேதாரண்யம் தாலுகாவிற்கு உட்பட்ட தலைஞாயிறு பகுதியில் இதனையொட்டி நிலவிய கூலி உயர்வு பேராட்டம், தீண்டா மைக்கு எதிரான போராட்டத்தில் களமாடிய தோழர்கள் மலேயா கோவிந்தசாமி, பி.எஸ். தனுஷ்கோடி ஆகியோரது போராட்டங்க ளில் பங்கேற்று, காவல்துறை அடக்குமுறை, தலைமறைவு வாழ்க்கை போன்றவற்றை கண்டவர் தோழர் முருகேசன். சிறுவயதில் இருந்தே தன்னை கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு பணி யாற்றினார். தான் வாழ்ந்த பகுதியில், டீக் கடைகளில் நிலவிய தீண்டாமை கொடுமை களுக்கு எதிராக போராடி வெற்றி கண்டார். அதுமட்டுமல்ல, வெள்ளப்பள்ளம் கடைத் தெருவில், கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றக்கூடாது என அதிகாரவர்க்கம் எதிர்த்த போது, அதனை முறியடித்து செங்கொடியை ஏற்றினார். அவர் ஏற்றிய செங்கொடி இன்றும் அதே இடத்தில் பட்டொளி வீசி பறக்கிறது. ஒவ்வொரு ஆண்டு பிப்.2 அன்று அவரது நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், ஞாயிறன்று கட்சியின் வெள்ளப்பள்ளம் கிளை சார்பில் கடைப் பிடிக்கப்பட்டது. அவரது மகன்கள் மூன்று பேரும் கட்சியின் உறுப்பினராக இருந்து, தந்தை ஏற்றிய செங்கொடியை உயர்த்திப் பிடித்து வருகிறார்கள். தோழர் எஸ்.முரு கேசன் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ராஜா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ் உள்ளிட் டோர் நினைவஞ்சலி செலுத்தினர்.