districts

img

தோழர் ராஜமாணிக்கம் காலமானார்

அறந்தாங்கி, நவ.19 - புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி ஒன்றியம் செல்லப்பன் கோட்டையைச் சேர்ந்த ராஜமாணிக்கம்,  உடல்நலக் குறைவால் செவ்வாயன்று காலமானார். அவருக்கு வயது 62.  இவர் கட்டுமான தொழில் செய்து  வந்த நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார். கட்சியின்  செல்லப்பன் கோட்டை கிளைச் செயலாளராகவும்,  மணமேல்குடி ஒன்றியக் குழு உறுப்பினராகவும் திறம்பட  செயலாற்றிய, பல்வேறு போராட்டங்களில் கலந்து  கொண்டு சிறை சென்றவர் தோழர் ராஜமாணிக்கம்.  அவருடைய மறைவு செய்து அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன், மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் என்.காளிதாசன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் கரூ.இராமநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அன்னா ரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.