districts

img

தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சி, மே 22- திருச்சி வெண்மணி இல்லத்தில் தோழர் ஆர்.உமாநாத் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், ஆர்.உமாநாத் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், திருச்சி புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.