அரியலூர், ஜூன் 26 -
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.மகா ராஜன் படத்திறப்பு நிகழ்வு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை யில் நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு ஜெயங்கொண்டம் ஒன் றியச் செயலாளர் வெங்க டாச்சலம் முன்னிலை வகித் தார். கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் மகாராஜன் உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார்.
மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மணிவேல், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் துரைராஜ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியுசி மாவட்டச் செயலா ளர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.