திருவாரூர், மே 27-
கொரடாச்சேரி ஒன்றியம் பழவனக்குடி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், விவசாயிகள் சங்க ஒன்றியக் குழு உறுப்பினருமான கா.கோவிந்தராஜ னின் துணைவியார் கோ.கல்யாணி சில வாரங்களுக்கு முன்பு காலமானார்.
இந்நிலையில் மறைந்த தோழர் கோ. கல்யாணியின் படத்திறப்பு விழா பழ வனக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. கோ.கல்யாணி அம்மாள் படத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினர் சி.லோகநாதன் உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.