திருவாரூர், ஜூன் 12 -
திருவாரூர் விளமல் வடக்கு தெருவைச் சேர்ந்த சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.கஜேந் திரனின் தாயார் தோழர் கே.ஜெயா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு காலமானார். தோழர் ஜெயாவின் படத்திறப்பு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன் தலைமை வகித்தார். மறைந்த தோழர் கே.ஜெயா படத்தை சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, தமுஎகச மாவட்ட தலைவர் எம்.சௌந்தர ராஜன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.அனிபா, மாநிலக் குழு உறுப்பி னர் ஏ.பிரேமா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் மற்றும் சிஐடியு தோழமை சங்கத்தினர் கலந்து கொண்டனர்.