districts

img

தோழர் இரா.தாமோதரன் முதலாமாண்டு நினைவு தினம்

மன்னார்குடி, பிப்.13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் திரு வாரூர் மாவட்டத் தலைவ ரும், கட்சியின் மூத்தத் தோழ ருமான இரா.தாமோதர னின் முதலாம் ஆண்டு நினைவு தினம் மன்னார்குடியில் கட்சி யின் நகரக்குழு சார்பில்  அனுசரிக்கப்பட்டது.  நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் கே.ஜெயபால் முன் னிலை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தோழர்  இரா.தாமோதரன் படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.  மறைந்த இரா.தாமோ தரனின் இணையர் இராதா தாமோதரன், சிஐடியு மாவட்  டச் செயலாளர் டி.முருகை யன், மாவட்ட துணை தலை வர் ஜி.ரெகுபதி, மூத்த தோழர் பி.சந்திரசேகரன், நகரக் குழு உறுப்பினர் கே.பிச்சைக் கண்ணு, மாதர் சங்க  கவிஞர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.