நன்னிலம், பிப்.10- நன்னிலம் ஒன்றியம் பேரளம், திருமீயச்சூர் கட்ட ளை தெருவில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் கே.சரஸ்வதி யின் கணவர் தோழர் டி.கலிய பெருமாள் புதனன்று மாலை காலமானார். இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனது பணி காலத்தில் கட்சி அமைப்புக்கு உறுதுணையாக இருந்தவர் என குறிப்பிடத்தக்கது. தோழரின் மறைவு செய்தி அறிந்த மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் ஜ.வி.நாக ராஜன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், ஆர்.குமரராஜா, பி.கோமதி, நன்னிலம் ஒன்றிய செயலா ளர் கே.எம்.லிங்கம் மாவட் டக்குழு உறுப்பினர்கள் டி. வீரபாண்டியன், கே.தமிழ் செல்வி, மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமதுஉதுமான், பி.ஸ்டாலின் மற்றும் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர் கள், நகர தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி னர். வியாழனன்று இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.