திருவாரூர், ஜன.28 - திருவாரூர் மாவட்டம் குட வாசல் ஒன்றியம் அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், வாலிபர் சங்கத் தின் முன்னாள் ஒன்றிய செய லாளருமான தோழர் க.பகத்சிங் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கால மானார். அவருக்கு வயது 28. குடவாசல் அருகே உள்ள புதுக்குடி சமத்துவபுரம் என்ற இடத்தில் திங்கள்கிழமை மாலை டாட்டா ஏசி மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் வாகனத்தில் சென்ற தோழர் பகத்சிங் படு காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திரு வாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பகத்சிங் காலமானார். தோழரின் மறைவு செய்தி அறிந்து, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தர மூர்த்தி, டி.வீரபாண்டியன், கே.பி.ஜோதிபாசு மற்றும் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன் உள்ளிட்டோர் அன்னவாச லில் உள்ள அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று, தோழர் பகத்சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். குடவாசல் ஒன்றியச் செயலா ளர்கள் டி.லெனின் (தெற்கு), கே.அன்பழகன் (வடக்கு), நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.கலைமணி, ஆர்.லெட்சுமி, பா.சுகதேவ் மற்றும் வாலிபர் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், வர்க்க வெகுஜன அரங்கத்தி னர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.