districts

img

பணி நிறைவு பாராட்டு, புத்தக வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி, ஜூலை 3 -  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைப் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவ. வெங்கடேஷ் பணி நிறைவு பாராட்டு விழா  மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்ட துணை  செயலாளர், எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ்  எழுதிய ‘அன்புடன் வாழ்த்துகள்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்ற விழாவிற்கு, தமுஎகச மாநிலக் குழு உறுப்பி னர் இளங்குமரன் தலைமை வகித்தார். பேரா. முனைவர் ஆத்ரேயா புத்தகத்தை வெளி யிட, அதனை கல்வியாளர் எட்வின், எழுத்தா ளர் ஷாஜகான் ஆகியோர் பெற்றுக் கொண்ட னர். முன்னதாக சங்க மாவட்டச் செயலா ளர் ரங்கராஜன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகநாதன் நன்றி கூறினார்.

;