districts

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தை காலையில் நடத்த கோரிக்கை

கும்பகோணம், ஏப்.6 - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கும்பகோணம் மாநகர பேரவைக் கூட்டம் சங்க பொறுப்பாளர் கற்பகம் தலைமையிலும், இராஜேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது.  கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாநகர செயலாளர் பழ.அன்புமணி ஆகியோர் சங்கத்தின் நடைமுறை குறித்து பேசினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் குறைதீர்க்கும் கூட்டத்தை மாலை நேரத்தில் நடத்தாமல், காலை 11 மணியளவில் துவக்கி மதியம்வரை நடத்திட வேண்டும். அப்போதுதான் மாவட்டத்தின் கடைக்கோடியிலிருந்து வரும் மாற்றுத்திறனாளிகள் காலத்தோடு வீட்டிற்கு செல்ல முடியும். மாதம் ஒருமுறை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தையும் இதே நடைமுறையில் பின்பற்ற வேண்டும். சுய தொழில் தொடங்க வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனை தகுதி வாய்ந்த நபர்களுக்கு முறையாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.