சேலம், செப். 23- ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அதிமுக சேர்மன் அரசின் நலத் திட்ட உதவிகளை சரிவர செய்யாமல் ஊழல் செய்வதாக வும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சேலம் மாவட்டம் ஏற் காடு ஊராட்சி ஒன்றியம் வெள்ளைக்கடை கிராம ஊராட்சி யில் ஊர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விளையாட்டு மைதானம் அமைக்கப்பட மூன்று முறை நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ. 3.80 லட்சம், ரூ. 1.80 லட்சம், ரூ. 5 லட்சம் என ரூ. 10.20 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியில் முறையாக விளையாட்டு மைதானம் அமைக்காமல், வெள்ளக் கடை ஊராட்சி பகுதியில் உள்ள குடிநீர் பைப்புகள் தொலைபேசி நிலைய கோபுரங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு மைதானத்தில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பஞ்சாயத்து நிர்வாகமும் ஒன்றிய சேர்மன் மற்றும் ஒன்றிய சேர்மன் சாந்தவள்ளி அவர்களின் கணவர் அதிமுக ஏற்காடு ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் கூட்டாக மக்களுக்கு அரசு ஒதுக்கும் நிதியை முறையாக செலவு செய்யாமல் ஊழல் புரிவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும், அரசின் திட்டங்கள் அமலுக்கு வரும்போது அதில் இவர்கள் ஊழல் புரிந்து திட்டத்தை உதாசீனப்படுத்தி வரு வதாகவும் மாவட்ட நிர்வாகம் இப் பிரச்சனையில் உரிய தலை யீடு செய்து மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுவது மாக நலத்திட்ட பணிகளுக்கு செலவு செய்ய உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.