அரியலூர், அக்.12- தனிநபருக்கு ஆதரவாக செயல்படும் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களுக்கு, அரசால் வழங்கப்பட்ட இடத் தினை 100 ஆண்டுகளுக்கு மேல் வரி செலுத்தி, சிலர் பயன்படுத்தி வந்ததாக கூறப் படுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தனிநப ருக்கு வழங்க முயற்சிப்பதாகவும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டி மடம் வட்டச் செயலாளர் பரமசிவம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திரண்டனர். இதில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா, மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.அம்பிகா ஆகியோர் கண்டன உரை யாற்றினர். தொடர்ந்து ஆண்டிமடம் கடைவீதி யில் பேரணியாக சென்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலு வலர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட் டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த னர். பின்னர், மாவட்ட, வட்டக் குழு உறுப்பி னர்கள் வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலு வலரிடம் மனு அளித்தனர்.