திருத்துறைப்பூண்டி, செப்.20 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளங்கோவில், கொத்த மங்கலம் கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமிய மக்க ளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் மன்னார்குடி சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கொத்தமங்கலம் காவிரி நகரில் வசிக்கும் பெரும் பான்மையான இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அடிப் படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட நிர்வா கம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நி லையில் அந்த மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அதன்பின் கட்சியின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு நேர டியாக களஆய்வு செய்யப் பட்டது. பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் புகார் மனு கொடுத்தும் நட வடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாவட்ட நிர்வா கத்தை கண்டித்து மன்னார் குடி சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் இஸ்லாமிய பொதுமக்கள் என நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடனடியாக திருத்து றைப்பூண்டி காவல் ஆய்வா ளர் மாரிமுத்து, மண்டல துணை வட்டாட்சியர் ஜோதி பாசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந் தம், ஊராட்சி செயலாளர் சரஸ்வதி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி, அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்றி தருவதாக வாக்குறுதி கொடுத்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.