மயிலாடுதுறை, ஜூலை 20 - மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட பட்டமங்கலம், மணக்குடி, மன்னம்பந்தல் ஆகிய பகுதிகளில் சமூக நலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலு வலருமான வே.அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி ஆகியோர் ஆய்வு செய்தனர். பட்டமங்கலம் ஊராட்சி முல்லை தெருவில் முதல்வ ரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15.29 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதை யும், மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தனர். பின்னர் மன்னம்பந்தல் ஊராட்சியில் அங்கன் வாடி மையத்தின் செயல்பாடுகளை சமூக நலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அமுதா, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆகியோர் ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, மன்னம்பந்தல் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கீரிட் வீடு கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தனர்.