திருவாரூர், ஜுன் 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட் டம் குடவாசல் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர். வரதராஜன் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கட்சியின் குடவாசல் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு, நகரக் குழு செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி செங்கொடி ஏற்றி, தோழரின் உருவப் படத்திற்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினார். தோழர் ஆர்.வரதராஜன், குடவாசல் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது மக்களுக்கு தேவையான பல்வேறு பணிகளை மேற்கொண்டு நற்பெயர் பெற்றவர். குறிப்பாக குடவாசல் அரிச் சந்திரா மயானம் மற்றும் வி.பி.சிந்தன் பேருந்து நிலை யத்தை சீர்படுத்தியது. குட வாசலில் பேரூராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மண், கப்பி சாலைகளாக இருந்த சாலை களை தார்ச்சாலையாக மாற்றியும், முட்டுச் சந்தாக இருந்த வழிகளை அகலப் படுத்தி சாலையாக மாற்றி மக்கள் பயன்பாட்டு கொண்டு வந்தவர். குடவா சல் பேரூராட்சிக்கு வருமா னம் ஈட்டு வகையில் வணிக வளாகம், இறைச்சி மார்க் கெட் உட்பட மக்களுக்கு தேவையான பல்வேறு வசதி களை செய்து தந்தவர். நினைவேந்தல் கூட்டத் தில், தோழர் ஆர்.வரத ராஜன் மக்களுக்கு களப் பணியாற்றிய காலத்தில் அவருடன் களத்தில் நின்று பணியாற்றிய மூத்த தோழர் களை பாராட்டி கதர் ஆடை அணிவிக்கப்பட்டது. வரதராஜனின் மகனும், சிபிஎம் நகர குழு உறுப்பின ருமான ஆர்.வி.லெனின் மற்றும் நகரக் குழு உறுப்பி னர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர்.