அரசு விடுதியில் வழங்கப்படும் தரமற்ற உணவு கிராப்பட்டியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, நவ.5- திருச்சி கிராப்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் கல்லூரி மாண வர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாண வர்கள் 120 பேர் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து, பலமுறை மாவட்ட ஆட்சிய ரிடம் நேரடியாக சென்று மனு கொடுத்தும், பல்வேறு போ ராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை என கூறப் படுகிறது. விடுதி வார்டனும், துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 50 -க்கும் மேற்பட்டோர் ஞாயி றன்று இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில் திருச்சி - மதுரை சாலையில் கிராப்பட்டி மேம்பாலத்தில், தங்களுக்கு கொடுக்கப்பட்ட தரமற்ற உணவுடன் சாலை யில் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதில், தரமற்ற உணவுகளால் விடுதி யில் படித்த 3 மாணவர் களுக்கு வாந்தி, பேதி ஏற் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இதுபோன்று மற்ற மாண வர்களுக்கும் ஏற்படக் கூடாது என்ற நோக்கிலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள் ளதாக மாணவர்கள் தெரி வித்தனர். ஆனால், போலீசாரால் மாணவர்களின் இப்பிரச்ச னைக்கு தீர்வு காண இயல வில்லை. இதனால் தரமற்ற உணவை பாத்திரத்துடன் (காலை உணவான இட்லி) தூக்கிக் கொண்டு மாண வர்கள் ஆட்சியர் அலுவல கம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது ஆய்வாளர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் தற்காலிக மாக போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
தமுஎகச வாசல் இலக்கிய வட்டத்தில் நூல்கள் அறிமுகம்
தஞ்சாவூர், நவ.5 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பட்டுக்கோட்டை கிளை - வாசல் இலக்கிய வட்டம் சார்பாக நூல்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. வாசல் இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.ஆறு முகம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சி.மணி மாறன் வரவேற்றார். பாடகரும், மூத்த உறுப்பினருமான கோவிந்தராஜ், மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் பாடல்களை பாடினார். கவிஞர் ஆம்பல் காமராஜ் எழுதிய, “சகதிப் பூ” நாவலை ஆசிரியர் இரா.இரஞ்சித், சுமித்திரா சத்தியமூர்த்தி எழுதிய, “ஆசை அகத்திணையா” கவிதை தொகுப்பினை மருத்துவர் வீரமணி, பிரதீபா சந்திரமோகன் எழுதிய, “இந்திர நீலக்கல்லும் இமைக்கா இரவுகளும்” நாவலை தி.தன பால் ஆகியோர் திறனாய்வு செய்தனர். எழுத்தாளர்கள் ஆம்பல் காமராஜ், சுமித்ரா சத்திய மூர்த்தி, பிரதீபா சந்திரமோகன் ஆகியோர் ஏற்புரை வழங்கி னர். யூமா வாசுகி மொழிபெயர்ப்பில் “கண்ணனின் கோபம்” கதையை மாணவர் இசயந்த், பிரபஞ்சனின் “அபஸ்வரம்” கதையை ஆனந்த் பழனிவேல் ஆகியோர் கூறினர். முன்னதாக பள்ளிக் கல்வித்துறை நடத்திய கலை இலக்கிய போட்டியில், மாநில அளவிலான பாட்டு போட்டி யில் முதல் பரிசை பெற்ற மாணவர் பாண்டீஸ்வரன், வினாடி -வினா போட்டியில் சிறப்பு பரிசு பெற்று தென்கொரியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் மாணவர் விஷ்வா ஆகியோ ருக்கு வாழ்த்து தெரிவித்து, புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. தமுஎகச கிளை பொருளாளர் கா.பக்கிரிசாமி நன்றி கூறினார். தமுஎகச கிளைத் தலைவர் முருக.சரவணன், செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்க வருவாய் அலுவலர் ஆய்வு
தஞ்சாவூர், நவ.5- பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சனிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த கடைகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர உரிமம் வழங்கப்படுகிறது. நிகழாண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் சில இடங்களில் வெடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே, பட்டாசு கடைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு கடைக்காரர்கள் உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், பேராவூரணியில் பட்டாசு விற்பனை செய்ய விண்ணப்பித்திருந்த கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை உள்ளிட்டோர் இருந்தனர்.
ராணுவ சுபேதாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
தஞ்சாவூர், நவ.5- ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற, தஞ்சா வூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் சுபேதார் பி. அருணாசலத்திற்கு ஞாயிற்றுக் கிழமை முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி முன் னாள் படைவீரர்கள் நலச்சங்கம், பொருளாளர் மணிமாறன் தலைமை வகித்தார். செயலர் பாலதண்டா யுதம் வரவேற்றார். தலைவர் நீல கண்ட சேகரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முன்னாள் படை வீரர் வீரமங்கையர் சங்கம் மாநிலத் தலைவர் ஆலயம் திலகரத்னம், மாநில துணைத் தலைவர் பொய்யா மொழி, மாநில இணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்பு செயலாளர்கள் சுப்புராஜ், வில்வ லிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பணி ஓய்வு சுபேதார் பி.அருணாசலம் ஏற்புரையாற்றி னார். சங்க இணைச் செயலாளர் திருஞானம் நன்றி கூறினார். இதில், 60-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கட்டுமான சங்க புதிய கிளை துவக்கம்
கரூர், நவ.5- கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், புன்னம்சத்திரம் ஊராட்சி, முத்து நகரில் கட்டுமான சங்க (சிஐடியு) புதிய கிளை துவக்கப்பட்டது. துவக்க விழா கூட்டத்திற்கு கே.கோகிலவாணி தலைமை வகித்தார். கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ப.சரவணன் கிளையை துவக்கி வைத்து பேசினார். புதிய கிளையின் செயலாளராக எஸ். ரஞ்சிதா, தலைவராக கே.கோகிலவாணி, பொருளாளராக எஸ்.பொன்னி, துணைத்தலைவராக ஏ.பழனிச்சாமி, துணைச் செயலாள ராக தங்கம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புன்னம்சத்திரம் ஊராட்சியில், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி புரியும் அனைவருக்கும் கூலி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். வீட்டுமனை உள்ளவர்களுக்கு கட்டுமான நல வாரியத்தில் வீடு கட்ட வழங்கப்படும் ரூ.4 லட்சத்தை உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
பசித்தோருக்கு உணவு நிலையம்
அறந்தாங்கி, நவ.6 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நிவாரணக் குழு சார்பில் ‘பசித்தோர் உணவு நிலையம்’ அமைக்கப்பட்டது. அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் எதிர்ப்புறம் பசித்தோர் உணவு எடுத்துக் கொள்ளும் வகையில் பொதுவாக அமைக்கப் பட்டுள்ள நிலையத்தை, அறந்தாங்கி நிவாரண குழு ஒருங்கி ணைப்பாளர் அப்துல்லாஹ் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் வழக்கறி ஞர் பா.வரதராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் மலையப்பன், இணை பொதுச்செயலாளர் முனைவர் முபாரக் அலி, பொருளாளர் கிரீன் முகமது, நகரத் தலைவர் புவனா செந்தில், நகர துணைச் செயலாளர் ரபீக், மட்டன் ஸ்டால் மீரா மைதீன் ஆகி யோர் ஏழைகளுக்கு உணவு வழங்கினர். இந்த உணவு நிலை யத்தில் தினமும் 50 ஏழைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி
அரியலூர், நவ.5 - அரியலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அரியலூர் மாவட்டம் வைப்பம் கிராமம், தெற்கு தெரு வைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மனைவி மாதவி (41). இவர் அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் சத்து ணவு அமைப்பாளராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செம்மந்தங்குடி அங்கன்வாடி மையத்தில் ஆள் பற்றாக்குறையின் காரணமாக அங்கே யும் சமைக்குமாறு மாதவியை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து, மன உளைச்சலில் இருந்த மாதவி, அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கம் முன்பு வெள்ளிக்கிழமை இரவு பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதையறிந்த ஊழியர்கள் அவரை மீட்டு அரிய லூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அரியலூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது நிறுவனங்களின் செயல்பாடுகள்: சட்டமன்றக் குழு ஆய்வு
புதுக்கோட்டை, நவ.5 - தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்திரபாண்டியன் தலை மையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னி லையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மணப்பாறை தொகுதி உறுப்பினர் பி.அப்துல்சமது, உடுமலைப்பேட்டை தொகுதி உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், விராலி மலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகைகளையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு இயற்கை மரண நிவாரண உதவித் தொகைகளையும், தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு மானிய உதவித்தொகை மூலம் வாக னங்களையும், 7 தூய்மைப் பணியாளர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணை களையும் குழுவின் தலைவர் அ.சௌந்திரபாண்டியன் வழங்கினார்.
பான் செக்கர்ஸ் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
தஞ்சாவூர், நவ.5- தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வடகிழக்கு பருவமழை, தீபாவளி பண்டிகை குறித்த விழிப் புணர்வு மற்றும் சாதனை புரிந்த மாணவி களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், கல்லூரி இயக்குநர் அருட் சகோதரி டெரன்சியா மேரி தலைமை வகித் தார். முதல்வர் செ.காயத்ரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் தஞ்சாவூர் தீயணைப்புத் துறை அலுவலர் குமார் விழிப்புணர்வு உரையாற்றினார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா என்ற இடத்தில் நடைபெற்ற சிட்டேரோயூ கராத்தே போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்ற, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி யின் இளங்கலை 3 ஆம் ஆண்டு வணிகவி யல் துறை மாணவி சி.தேவர்தர்ஷினி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். இதேபோல், இளங்கலை 3 ஆம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி ஆர்.சுபஸ்ரீ கோவாவில் நடைபெற்ற, தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ஒற்றைச் சிலம்பம் மற்றும் சுருள் வாள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவ்விரு மாணவிகளும் அவர்களது பெற்றோரும் கல்லூரியின் சார்பாகப் பாராட் டப்பட்டனர். தீயணைப்புத் துறையின் மாவட்ட அலுவலர் குமார் மாணவிகளைப் பாராட்டி சிறப்பு செய்தார். மேலும் வடகிழக்கு பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்புடனும் கொண் டாடுவதற்கான செயல் விளக்கம் அளித்தார்.
சென்னை-நெல்லை சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்
திருநெல்வேலி, நவ.5- தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் இடையூறு இன்றி பய ணிக்க வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. அதன் படி, சென்னை- நெல்லை இடையே நவம்பர்.8, 15, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னையிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நவம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப் பட்டு அதிகாலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும்.இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போதை ஒழிப்பு, சைபர் குற்றம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தஞ்சாவூர், நவ.5- தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில், நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் சைபர் குற்றம் தடுப்பு அமைப்பு சார்பாக போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், மருது பாண்டியர் கல்வி நிறுவனங் களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை, காவல் கண்காணிப்பாளர் மோகன் தாஸ் மற்றும் பட்டுக் கோட்டை, மதுவிலக்கு அம லாக்கத்துறை காவல் ஆய் வாளர் அன்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
தேடப்பட்ட ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டார்
திருச்சிராப்பள்ளி, நவ.5- திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நீலி யாம்பட்டி செல்லும் சாலையில் சாலப்பட்டி மலையடி வாரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தை யன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் நெருங்கி வருவதை கண்ட அந்த நபர், யாரும் பக்கத்தில் வராதீர்கள். வந்தால் சுட்டு விடுவேன் என்றும், மேலும் கையில் வெடிகுண்டு வைத்திருப்ப தாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரை பிடிப்பதற்காக காவல்துறை யினர் சுற்றி வளைத்தனர். உடனே அந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து காவல்துறை யினர் மீது வீசினார். அது தொட்டியம் காவல் நிலைய காவலர் ராஜேஷ் குமார் மீது விழுந்ததில், அவரது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்பு அதைப் பார்த்த போது, அது வெடிகுண்டு அல்ல பெரிய பாறாங்கல் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியை காட்டி சுட முயன்ற போது, சுதாகரித்துக் கொண்ட ஆய்வாளர் முத்தையன், தற்காப்பிற்காக தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் அந்த நபரை சுட்டார். இதில் அவரது முட்டியில் 2 குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரிக்கையில், அவர் திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள அலெக்ஸ் என்கிற அலெக் சாண்டர் என்பது தெரியவந்தது. காயமடைந்த ரவுடி அலெக்ஸ் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக் காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு காவல்துறை பாது காப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அலெக்ஸ் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் கடத்தல், வழிப்பறி, கொள்ளை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருச்சி, அரியலூர், பெரம்ப லூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார். கடைசியாக மணி கண்டத்தில் ஒருவரை கொலை செய்ய முயன்றுள் ளார். இந்த வழக்கில் அலெக்ஸை மணிகண்டம் போலீ சார் தேடி வந்தனர். ஆனால் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் தொட்டியம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த அலெக்சை போலீசார் சுட்டுப் பிடித்துள் ளனர். அவர் மீதான வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. ரவுடி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.