districts

டெல்டா மாவட்டப் பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர், செப்.26 -  டெல்டா மாவட்டப் பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட உள்ள தால், விவசாய பெருங்குடி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள் ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சரால் 2024-2025 ஆம் ஆண்டு, காவிரி டெல்டா மாவட் டங்களின் பாசனத்திற்காக ஜூலை-28 ஆம் தேதி மாலை 3. மணியளவில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, கல்லணையிலிருந்து ஜூலை-31ஆம் தேதி காலை 9.15 மணியளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.  தற்போது அனைத்து உப ஆறுக ளிலும் கடைமடை வரை நீர் சென்ற டைந்து விவசாய பெருங்குடி மக்கள் விவசாயப் பணிகளை டெல்டா பகுதிகளில் தொடங்கி உள்ளனர்.  ஜூலை-28ஆ ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.76 அடியாக வும், நீர் இருப்பு 79.493 டி.எம்.சியாகவும் உள்ள நிலையில், இருப்பில் இருக்கும் தண்ணீர் பாசனத்திற்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வந்தது.   தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பெருங்குடி மக்கள் பயிர்கள் சாகுபடி சிறந்த முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளவும், நீர் பங்கீட்டினை முறைப் படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும், செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாகவும் நீர் இருப்பு 64.569 டி.எம்.சியாகவும் உள்ள சூழ்நிலையில், மேட்டூர் அணையில் தினமும் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு தற்போது எடுக்கப்பட்டுவரும் 15,000 கனஅடியிலிருந்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ எடுத்து செப்.27 மாலை 6 மணி முதல் முறைப்பாசனத்தை அமல்படுத்தவும், முதல் ஆறு நாட்கள் வெண்ணாற்றிலும் அடுத்த ஆறு நாட்கள் காவிரியிலும் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  கல்லணைக் கால்வாயில் மேற்பகுதி முறை, கீழ்பகுதி முறை என்று முறை வைத்து தண்ணீர் வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த ஆண்டு பயிர் சாகுபடியில் எந்த வித இடையூறும் இல்லாது பாசன வசதி அளிக்கப்பட வேண்டும் என்றும், பருவ மழை கிடைக்கப்பெறின் அதற்கேற்ப நீர்ப் பங்கீடு மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும், திருச்சி மண்டல தலைமைப்  பொறியாளர் அறிவுரை வழங்கி யுள்ளார்கள்.   எனவே, விவசாயப் பெருங்குடி மக்கள்  நீரினை சிக்கனமாக பயன்படுத்தி நீர்வளத்துறையின்  நீர் பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கி றேன்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.