புதுக்கோட்டை, மே 31-
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அன்னவாசல் ஒன்றியம், எல்லைப்பட்டி, மண்டக குடிநீர் ஊரணி சீரமைப்பு, ஆண்டிப்பட்டியில், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், விஜயா, சிதம்பரம், சித்ரா ஆகிய பயனாளிகள் வீடுகள் கட்டுமானம், சித்தன வாசல் சமத்துவபுரம் வீடுகள், பிச்சை என்ற பயனாளி யின் வீட்டை பழுது பார்த்தல், 30,000 லிட்டர் கொள்ளள வுடைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பணி களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், திருவேங்கைவாசல் அக்ரஹாரம் தெருவில் ரூ.6.93 இலட்சம் செலவில் நெற்களம், விளத்துப்பட்டி கிரா மத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.