districts

img

மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம்: புதுக்கோட்டை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, பிப்.18-  புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், மாபெரும் கல்விக்கடன் முகாம் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் மு.அருணா, செவ்வாய்கிழமை தொடங்கி வைத்து மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் உதவித்தொகைக்கான வங்கி காசோலைகள் மற்றும் ஆணைகளை வழங்கினார்.  அவர் பேசும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில், ஸ்டேட் பேங் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் சிறப்பாக கல்வி கடன்களை மாணாக்கர்களுக்கு வழங்கி வருகிறது. மாணாக்கர்கள் இதுபோன்று கல்விக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.  இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த. நந்தக்குமார், மாமன்னர் கல்லூரி முதல்வர் பா. புவனேஸ்வரி, முதன்மை மேலாளர் (எஸ்.பி.ஐ.) எஸ். பிரியா மகேந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.