புதுக்கோட்டை, நவ.22 - புதுக்கோட்டை மாவட்டத் தில் 3 சத்துணவு மையங் களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றி தழ்களை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா செவ்வாய்க் கிழமை வழங்கினார். இதுகுறித்து அவர் தெரி விக்கையில், “குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, புதுக்கோட்டை தர்மராஜ் பிள்ளை நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கியுஸ்ட்டு (Quest Certification) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை தணிக்கை அலுவலரால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இம்மையங்களில் உள்ள உணவு கூடங் களில் சுடுதண்ணீர் வசதி, உணவு வெப்ப மானி, ஜன்னல்களில் பூச்சிகள் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள், உணவு பாதுகாப்பு அங்கீகாரம், தொற்றில்லா சான்றிதழ், காய்கறி தோட்டம் உள்ளிட்டவை கடைப்பிடிக்கப்பட்டு இருப்பது கண்டறியப் பட்டது. அதனடிப்படையில் மேற்கண்ட மூன்று பள்ளிகளின் சத்துணவு மையங்க ளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றுகள் வழங்கப்பட் டன” என்றார். இந்நிகழ்வில், சென்னை இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவன முதன்மை தணிக்கை அலுவலர் ப.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) எம். ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.