districts

4 நாள்களாக மயிலாடுதுறையை அச்சுறுத்தும் சிறுத்தை: பொதுமக்கள் ஒத்துழைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை, ஏப்.6 - மயிலாடுதுறை நகரப் பகுதியான கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்.2 அன்று இரவு சிறுத்தை நட மாட்டம் இருந்ததையடுத்து, வனத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை யினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.  மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, நாகை மாவட்ட வன அலுவலர் அபிஷேக்  தோமர், திருச்சி மண்டல வன பாது காவலர் சதீஷ் ஆகியோர் தேடுதல் பணி களை ஆய்வு செய்தனர்.  முதலில் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட நிலையில், அடுத்து அங்கிருந்து 3 கி.மீ  தொலைவில் உள்ள ஆரோக்கியநாத புரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதை யடுத்து தொடர்ந்து 4 நாட்களாக அப்பகு தியில் வனத்துறை, தீயணைப்புத் துறை, காவல் துறையினர் ஒன்றிணைந்து தேடும்  பணியை மேற்கொண்டனர்.  இதனிடையே வியாழனன்று இரவு சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று கழுத்தில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. அந்த ஆட்டை சிறுத்தை கடித் திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், சிறுத்தையை தேடும் பணிக்கு பொதுமக்கள் இடையூறு ஏற்ப டுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்  ஏ.பி.மகாபாரதி கேட்டுக் கொண்டார்.  இதுகுறித்து வெள்ளியன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “செம்மங்குளம் பகுதியில் ஏப்.2 அன்று  சிறுத்தை நடமாடுவதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், உடனடி யாக வனத்துறை, காவல்துறை, தீய ணைப்புத்துறை  வீரர்கள் சம்பவ இடத் துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, சிறுத்தையை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி, கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், ஏப்.4 அன்று தேதி சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் பகுதி யில் நடமாடுவதாக பெறப்பட்ட தகவ லின்படி, வனத்துறையினர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தை கால்தடம் பதிவானதை கொண்டு  ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடுவது உறுதி செய்யப்பட் டது. சிறுத்தையை பிடிப்பதற்கு வன உயிரின காப்பாளர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக அனுபவமுள்ள வன  பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு, ஊர்குடி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து 16 தானியங்கி கேம ராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறது. 3 கூண்டுகள் வைக்கப் பட்டுள்ளன. 13 குழுக்கள் தேடுதல் பணி யில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அச்சப்பட வேண்டாம் எனவும் அறிவு றுத்தப்படுகிறது. வனத்துறை அலுவலர்கள், பணியா ளர்கள் சிறுத்தையை பிடிக்க எடுக்கப் படும் முயற்சிகளின்போது, சம்பந்தப் பட்ட ஊர் பொதுமக்கள் கூட்டமாக கூடி,  சத்தம் எழுப்பி, சிறுத்தையை பிடிக்க  மேற்கொள்ளும் பணிகளுக்கு இடையூறு  ஏற்படுத்துகின்றனர். இதனால் அமைதி யான சூழல் மாறி சிறுத்தை நடமாட் டத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுவ துடன், இடையூறு ஏற்பட்டு சிறுத்தை வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்கிறது. எனவே, பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்க வனத்துறை மற்றும் காவல்துறை யினரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம் கரு வேலங்காடு பகுதியில் வெள்ளியன்று இரவு 3 கூண்டுகளில் ஆடுகள் மற்றும் இறைச்சியை வைத்து, சிறுத்தை அகப் படுமா என வனத்துறையினர் காத்திருந்த னர்.  இந்நிலையில் சனிக்கிழமை காலை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள  கூட்ஸ் யார்ட் பிளாட்பார்மில் ஒரு ஆட்டை அடித்து சிறுத்தை தின்றதாக தகவல்  கிடைத்தது. ஆனால், சிறுத்தை வந்து  சென்றதற்கான தடயங்கள் இல்லாத தால், ஆட்டினை சிறுத்தை தான் கொன்றது என்பதை உறுதிப்படுத்த இயலாது என்று வனத்துறையினர் கூறினர். 4 நாட்களாக மயிலாடுதுறை நகரப்  பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்ப தால், அப்பகுதியில் உள்ள 9 பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.