districts

பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர், மே 20-  

    தஞ்சை மாவட்டத்தில் 710 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 16 வாகனங்களின் தகுதி சான்றை ரத்து செய்து  ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய இடங் களில் பள்ளி வாகனங்க ளில் ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

   தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாக னங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.  

   ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட தீயணைப்பு அலு வலர் குமார், வட்டார போக்கு வரத்து அலுவலர் முரு கன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், முதன் மைக்கல்வி அதிகாரி சிவக்குமார், மாவட்ட கல்வி  அலுவலர் (தனியார் பள்ளி கள்) அமலா, போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய் வாளர் ரவிச்சந்திரன் மற்றும்  அதிகாரிகள் உடன் இருந்தனர்.

   மேலும் ஆய்வில், ஓட்டு நர்கள் மற்றும் நடத்துநர் களுக்கு, மாவட்ட தீய ணைப்பு அலுவலர் குமார் தலைமையில் வீரர்கள் தீய ணைப்பு கருவிகளை எவ் வாறு இயக்குவது, தீ பிடித் தால் எவ்வாறு அணைப் பது என்பது குறித்து செயல் முறை விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.