districts

img

கனமழையால் பயிர்கள் பாதிப்பு: மெலட்டூரில் ஆட்சியர் ஆய்வு

பாபநாசம், ஜன.4 - அம்மாபேட்டை வட்டாரத்தில் நடப்பு சம்பா தாளடி பருவத்தில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜன.1 அன்று பெய்த கனமழையினால் சுமார் 2650 ஏக்கர் பரப்பளவில் அறுவடை நிலை மற்றும் பால்பிடிக்கும் தருணத்தில் உள்ள நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. திங்களன்று மெலட்டூரின் சேத்தி கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா நெல் வயல்களில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார். களப்பணியாளர்கள் சரியான கணக்கெடுப்பு மேற்கொண்டு உடனே பயிர் பாதித்த விவசாயிகளின் பட்டியலை அரசுக்கு வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா, மெலட்டூர் வருவாய் ஆய்வர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.