காஞ்சிபுரம், மார்ச் 5 - காஞ்சிபுரம் மாவட்டம், சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்று தழ்களை திங்களன்று வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளுவப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்றத்தூர் கலப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அய்யப்பன்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் புரட்சித்தலை வர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் எரிவாயு, மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் இணைப்புகள், வண்ணம் பூசப்பட்ட சுவர்கள், காற்றோற்ற வசதி போன்ற 25 பொதுவான நடைமுறைகளை பூர்த்தி செய்து 5 நட்சத்திரம் (Five Star) குறியீடு பெற்ற தால் ISO 9001 : 2015 தரச் சான்றிதழ் 3 சத்துணவு மையங்களுக்கு வழங்கப் பட்டது. சத்துணவு மையங் களுக்கு வழங்கப்பட்ட ISO 9001:2015 தரச்சான்று தழ்களை வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களி டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். தற்போது தமிழக முழுவ தும் அனைத்து சத்துணவு மையங்களிலும் தற்போது இது போன்ற நடைமுறை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது.