districts

img

நிலக்கரி ஏல அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

மதுக்கூர், ஏப்.10-  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட, காவிரி டெல்டா  பகுதிகளில், ஒன்றிய அரசு, நிலக்கரி எடுக்க  அனுமதி அளித்ததைக் கண்டித்தும், ஏல  அறிவிக்கை செய்தது போல், ரத்து அறி விக்கை செய்திட வலியுறுத்தியும், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் சார்பில் மதுக்கூர் அருகே கீழக்குறிச்சி கடைத்தெருவில் ஞாயி றன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் எம்.அய்யநாதன் தலைமை வகித்தார்.  மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடரா ஜன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் டி.மோகன்தாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி, விவசாயத் தொழி லாளர் சங்க மதுக்கூர் ஒன்றியச் செயலாளர்  தெ.பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.