districts

img

ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி ஏற்படுத்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஏப்.27-

  அரியலூர் நகராட்சி பின்புறம் 70க்கும் மேற்பட்ட குடிமனைகளுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்றி பாதை வசதி செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி, மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா ஆகியோர் பேசினர். மாவட்  டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணிவேல், கிருஷ்ணன், அருணன், வெங்கடசலம், கந்தசாமி, பரமசிவம், அம்பிகா உள்  ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.