districts

பேராவூரணி அரசுக் கல்லூரியில் தூய்மைப் பணி

பேராவூரணி, ஏப்.18-

  பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் 1,260 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலை யில் மாணவர்களின் விளையாட்டு திடல் அடிக்கடி புதர் மண்டி சுத்தம் செய்ய முடியாத நிலைமை இருந்தது. இதை யடுத்து, பேராவூரணி “ழ” பவுண்டேஷன் தங்களது சொந்தச் செலவில் மாணவர்களின் விளையாட்டுத் திடலை  டிராக்டர் மூலம் சுத்தம் செய்து கொடுத்தனர்.

   இதைத் தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு  விழாவில், ‘ழ’ பவுண்டேஷன் சேவையை பாராட்டி நிறு வனர் கார்கி அசோக்குமார்,  பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் துரை. நீலகண்டன் ஆகியோருக்கு, பள்ளி  முதல்வர் சி.ராணி பயனாடை அணிவித்து, கேடயம் வழங்கிப் பாராட்டினார்.  ‘ழ’ பவுண்டேஷன் பொருளா ளர் குமார், நிர்வாகிகள் செந்தில்குமார், அருண்குமார், கருப்பையா, தேவராஜ், சபரிநாதன் மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.