தஞ்சாவூர், நவ.21 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் கல்லூர ணிக்காடு ஊராட்சி, ஆதி திராவிடர் நலத்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு தாட்கோ நிதி உதவி மூலம் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடத்தை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வியாழக்கிழமை காலை திறந்து வைத்தார். அப்போது, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், மாவட்ட வரு வாய் அலுவலர் தியாகராஜன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர் அலிவலம் அ. மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் அண்ணாதுரை, ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்ப ழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஆகியோர் உடன் இருந்தனர்.