திருச்சிராப்பள்ளி, ஜூன் 15- சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் திருச்சி யில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ஜான் ஆச்சரியம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் மாநில, மாவட்டக் குழு முடிவுகளை விளக்கி பேசி னார். விரைவு போக்குவரத்து கழக சங்க மாநிலத் தலைவர் அருள் மற்றும் நிர்வாகிகள் பேசினர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்க ளில் பேருந்துகளை இயக்குகிற ஓட்டுநர்-நடத்துநர், மெக்கானிக்குகள் உட்பட 25,000 காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை. இத னால் பணிமனையில் குறைந்தது, 10 பேருந்து களை இயக்க முடியாமலும், தொழிலாளர் கள் இரட்டிப்பு பணி செய்ய கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு காலிப் பணியிடங் களை உடனே நிரப்பி, அனைத்து பேருந்து களையும் இயக்க வேண்டும். அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே செட்டில்மெண்ட் தொகை வழங்க வேண்டும். 7 ஆண்டுகளாக வழங்கப்படாத டி.ஏ-வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஜூன் 24 அன்று காலை 10 மணி முதல் ஜூன் 25 அன்று காலை 10 மணி வரை திருச்சி டோல்கேட் பணிமனை முன்பும், மிளகுபாறை தலைமை அலுவல கம் முன்பும் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதுகுறித்து ஜூன் 18 அன்று பிரச்சாரம் நடத்துவது என்றும், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசை கண்டித்தும். பாலஸ்தீனர் களுக்கு ஆதரவு திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.