விருதுநகர், மார்ச் 9- அரசுக்கும், ஆட்சிக்கும் பொதுமக்கள் மத்தியில் அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் மதுபான விற் பனை செய்யும் “ மனமகிழ் மன்றம்“ உரிமங்கள் அனைத் தையும் ரத்து செய்ய வேண் டுமென சிஐடியு-டாஸ்மாக் ஊழியர் சம்மேளன கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனக் கூட்டம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மாநில துணைத் தலைவர் சி.வேல்முருகன் தலைமை தாங்கினார். சிஐ டியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் துவக்கி வைத்துப் பேசி னார். சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல் வன் விளக்கிப் பேசினார். சிஐ டியு மாநிலச் செயலாளர் பி.என்.தேவா வாழ்த்துரை வழங்கினார். மேலும் இதில் மாநில பொருளாளர் சந்திரன், துணைப் பொதுச் செயலா ளர்கள் ஜான் அந்தோணி ராஜ், பி.முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். அதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பணிநிரந்தரம் செய்ய வேண் டும் என்பதாகும். இக்கோரி க்கையை அரசு நிறைவேற்ற மறுக்கிறது. தமிழ்நாட்டில் மது விலக்கு அமுல்படுத்தப் படும் என திமுக தேர்தல் வாக்குறுதியின்படி 2021இல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கடையையும் மூடவில்லை. அதேநேரத்தில் எப்.எல்.2 மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமங்கள் வழங் கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் புற்றீ சல் போல் முளைத்துள்ள மனமகிழ் மன்ற உரிமங் களை ரத்து செய்ய வேண் டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.