districts

img

காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறையைப் புகுத்த சிஐடியு கடும் எதிர்ப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.7- நிரந்தரத் தன்மை வாய்ந்த பணி களில் உள்ள காலிப் பணியிடங்கள்,  சி-டி பிரிவு ஊழியர்கள் காலிப் பணி யிடங்கள், போக்குவரத்து, மின்  வாரியம், குடிநீர் வடிகால் வாரியம்,  அரசு கேபிள் நிறுவனம் உள்ளிட்ட  மாநில அரசுத்துறை நிறுவனங்க ளில் அவுட்சோர்சிங். காண்ட்ராக்ட் முறையைப் புகுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆட்டோ, கட்டுமானம், தரைக்கடை வியா பாரிகள், சுமைப்பணித் தொழிலா ளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து முறைசாராத் தொழிலா ளர்களுக்கும் நிறுத்தப்பட்ட ஓய்வூ தியத்தை வழங்க வேண்டும். ரயில்வே உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் நிரந்தரப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ள ஒப்பந்தம், மதிப்பூதியம், தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி யில் குப்பை அள்ளும் பணியைத் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் கொடுக்கக்கூடாது. பல ஆண்டு காலமாகக் குப்பை அள்ளும் பணி யைச் செய்து வரும் தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை நிரந்த ரப்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐ டியு மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாநிலச் செயலாளர் ஜெயபால், மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், செல்வி, மணிகண்டன், சிவக்குமார், சந்திரன், கருணாநிதி, எஸ்.கே.செல்வராஜ் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.
திருவாரூர்
ஓஎன்ஜிசியில் பணிபுரியும் ஒப்  பந்த ஊழியர்களுக்கு பணிப் பாது காப்பு வழங்க வேண்டும். அனைத் துப் பகுதி தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சமாக மாத ஊதியம் ரூ.26,000 வழங்கவேண்டும் என  வலியுறுத்தி திருவாரூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் பி. சிங்காரன், மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனீபா, மாவட்டச் செய லாளர் டி.முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பிரேமா, இரா.மாலதி, எஸ்.வைத்தியநாதன் பி.என்.லெனின், கே.கஜேந்திரன், டி.வீரபாண்டியன், ஜி.ரெகுபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கரூர்
கரூரில் சிஐடியு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட் டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்டப் பொருளாளர் ப.சரவ ணன், மாவட்ட நிர்வாகிகள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, வி.பாலசுப்ர மணியன், அரவிந்த், சுப்பிரமணி யன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.