சிஐடியு மாநில மாநாட்டு செந்தொண்டர் அணிவகுப்பில் கலந்துகொண்டவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. ஞாயிறன்று (நவ.13) மார்த்தாண்டம் மதிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செந்தொண்டர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் செந்தொண்டர் பயிற்சியளித்த சரவணக்குமார், செந்தில் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.