தஞ்சாவூர், பிப்.8- பொதுத்துறை நிறுவனங் களில் ஒப்பந்த பணியாளர் முறையை கைவிடக் கோரி தஞ்சாவூர் ரயிலடியில் சிஐ டியு சார்பில் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மாநி லச் செயலாளர் எம்.தனலெட் சுமி விளக்கவுரையாற்றி னார். சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் பி.என்.பேர்நீதி ஆழ் வார், மாவட்ட நிர்வாகிகள் து.கோவிந்தராஜூ, கே. அன்பு, எஸ்.ராஜாராமன், ஜி. மணிமாறன், சா.செங்குட்டு வன், ஏ.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஒன் றிய, மாநில பொதுத்துறை, மாநில அரசு அலுவலகங் கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நிறு வனங்களில் ஒப்பந்த தொழி லாளர் முறைக்கு (அவுட் சோர்சிங்) காண்ட்ராக்ட் விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே, மின்சாரம், அரசு போக்கு வரத்து, டாஸ்மாக், நுகர் பொருள், கூட்டுறவு நிறுவ னங்களில் பணிபுரியும் ஒப் பந்த, தினக்கூலி தொழிலா ளர்களை பணிநிரந்தரம் செய்து, மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.