கிராம ஊராட்சிகளில் பணி புரியும் ஒஎச்டி ஆப்ரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி ஒஎச்டி ஆப்ரேட்டர், தூய்மைப் பணியாளர், தூய்மைக் காவலர் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கரூர் ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் ஏ.ரமேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், கே.வி.கணேசன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சி.ஆர்.ராஜாமுகமது, ப.சரவணன், என்.ரெங்கராஜன், சி.அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.