கும்பகோணம், ஜன.2- கும்பகோணம், சென்னை புறவழிச்சாலை யில் சிஐடியு புதிய ஆட்டோ நிலையம் திறப்புவிழா ஆட்டோ சங்க தலைவர் ஆரோக்கியதாஸ் தலை மையில் நடைபெற்றது. சிபிஎம் குடந்தை மாமன்ற உறுப்பினர் செல் வம், புதிய ஆட்டோ நிலை யம் திறந்து வைத்து, கொடி யேற்றினார். ஆட்டோ நிலைய ஓட்டுநர்களுக்கு புதிய அடையாள அட்டை யை மாநகர ஆட்டோ சங்க கௌரவத் தலைவர் செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கொர நாட்டு கருப்பூர், ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா பதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், முன் னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பகவதி மற்றும் புதிய சிஐடியு ஆட்டோ ஸ்டாண்ட் செயலாளர் ராஜா, பொருளாளர் சண் முகவேல், துணைத் தலை வர் கோவிந்தசாமி, துணைச் செயலாளர் ஜான்சமேலி யன் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆட்டோ ஓட்டுநர்கள் வேண்டுகோள் இந்த புதிய சிஐடியு ஆட்டோ ஸ்டாண்டில் 22 உறுப்பினர்கள் உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பதி, புதுச்சேரி, கடலூர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பேருந்தில் இருந்து இறங்கி வரும் பயணிகள் தங்களை 24 மணி நேரம் தொடர்பு கொண் டால் பாதுகாப்பாக அவர்கள் இல்லத்திற்கு இறக்கி விடப் படுவார்கள் என்று புதிய ஆட்டோ நிலைய ஓட்டுநர் கள் தெரிவித்தனர்.