மதுரை, டிச. 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு கட்சி உறுப்பினரும் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங் கத்தை சேர்ந்தவர் பிச்சை. இவரது ஆட்டோவில் மதுரை கோச்சடை டோக் நகரைச் சேர்ந்த சிவா குடும்பத்தினர் சென்ற போது ரூ. 3 லட்சத் தவறவிட்டனர். அந்த பணத்தை ஆட்டோ ஓட்டு நர் பிச்சை அவர்களது வீட்டுக் கே சென்று ஒப்படைத்தார். சிவா மற்றும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய - 2ஆம் பகுதிகுழு உறுப்பினர் சதுரகிரி ஆகி யோர் பிச்சைக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்த னர். தொடர்ந்து பிச்சை அவர் களை பாராட்டும் விதமாக மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் மாற்றுத்திற னாளி சங்க மாவட்ட செய லாளர் ஆ. பாலமுருகன், துணைச் செயலாளர் ராசப்பா ஆகியோர் வீட்டு க்கு சென்று சால்வை அணி வித்து பாராட்டினர்.